Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றேன் – வெளிப்படையாக கூறிய முன்னாள் இராணுவ தளபதி

October 30, 2019
in News, Politics, World
0

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும்  தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று   இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், தனது கட்சியில் அரசியல்வாதிகளும் ஊழல் வாதிகலும் இல்லாதமையினால் நாட்டை மேம்படுத்துவதற்கான சகல வாய்ப்பு தனக்கு இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்பது தனது கனவு அல்ல என தெரிவித்த மகேஷ் சேனநாயக்க, நாட்டின் மக்களுக்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

அத்தோடு சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்த அவர், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு கடந்த காலத்தில் தூதுவர், செயலக பதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுபோன்ற சலுகைகளை தான் நிராகரித்ததாகவும் சுட்டிக்காட்டிய மகேஷ் சேனநாயக்க இன்னும் சாதிக்க வேண்டியவை அதிகம் இருப்பதனால் சிவில் சமூகத்தில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.

Previous Post

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் -சஜித்

Next Post

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை – ஆணையாளர் விளக்கம்

Next Post

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை – ஆணையாளர் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures