ஊரடங்கு சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 200 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப்பேச்சாளரும், பிரதிகாவல்துறை அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் 3 ஆம் திகதியில் இருந்து இன்று(புதன்கிழமை) காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் 220 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.