கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகில் எந்த நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படாத பலி எண்ணிக்கையை இத்தாலி கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்துள்ளது.
உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 919 பேரை பறிகொடுத்துள்ளது ஐரோப்பிய நாடான இத்தாலி.
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் நாடு மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றில் இருந்து இன்று குறைந்து காணப்பட்டாலும் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அக்டுமையாக இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்தனர்.

