Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உரிய நடவடிக்கை எடுங்கள் | ஹர்ஷ டி சில்வா சபாநாயகரிடம் வலியுறுத்தல்

May 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி! 

விசா விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க குழுவுக்கு முன்னிலையாகுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு அழைப்பு விடுத்தியிருந்தோம்.

இருப்பினும் இந்நிறுவனங்களின் அரச அதிகாரிகள்  குழுவுக்கு முன்னிலையாகவில்லை.ஆகவே இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைளை முன்னெடுங்கள் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நிலையியற் கட்டளையின் 121 ஆவது பிரிவுக்கு அமைய அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு அரச நிறுவனங்களை அழைத்து விசாரணைகளை முன்னெடுக்கிறோம்.

வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு விசா விநியோக சேவை வழங்கப்பட்டுள்ளதால்  ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து விளக்கம் கோருவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு இன்று  கடந்த 13 மற்றும் 14 ஆம்  திகதிகளில் முன்னிலையாகுமாறு அழைத்திருந்தோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.யு.குணதிலக,அமைச்சின் மேலதிக செயலாளர் கருணாரத்ன, பிரதான நிதி அதிகாரி பதிரன மற்றும் சட்ட அதிகாரி உப சிறி உட்பட நால்வரையும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுப்பிட்டிய,மேலதிக கட்டுப்பாட்டாளர் இமால் குணவர்தன, நிதி முகாமைத்துவ அதிகாரி பி.ஜயசிங்க ஆகியோரை குழுவுக்கு முன்னிலையாகுமாறு அழைத்திருந்தோம்.

அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு முன்னிலையாகுவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களம்.’தாம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அலுவலகத்தை மாற்றினோம்.ஒருசில கோப்புக்கள் கிடைக்கவில்லை.

ஆகவே குழுவுக்கு முன்னிலையாக முடியாது’ என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்கள்.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின்  விருப்பத்துக்கு அமைவாகவே திகதி ஒதுக்கப்பட்டது.ஆகவே  குழுவுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்திருந்தேன்.

நிதி தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அது குறித்து குழுவுக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்தால்  இந்நிறுவனங்கள் கட்டாயம் குழுவில் முன்னிலையாக வேண்டும்.ஆனால் இவர்கள் முன்னிலையாகவில்லை.

இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் ஒரு செயற்பாடாகும்.மக்களின் பிரச்சினை பற்றி பேசுகிறோம்.ஆகவே அரச நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பாராளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Previous Post

லங்கா பிறீமியர் லீக் அணி உரிமையாளர் ஒருவர் கைது

Next Post

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு

Next Post
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures