Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உரத்தை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்த ஐவர் கைது

July 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

மஹஓய விவசாய சேவை திணைக்களத்தின் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உரத்தை வேறு ஒரு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாய சங்கத்தின் அதிகாரிகள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மஹஓய பிரதேச விவசாய சேவைகள் திணைக்களத்தில் மஹஓய பிரதேச விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உரப்பொதிகள் திருடப்பட்டுள்ளதாக விவசாய சேவை அலுவலக அதிகாரி ஒருவரால் மஹஓய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மூவர், செயலாளர் மற்றும் அதற்கு உதவியாக செயற்பட்ட ஒருவர் உட்பட ஐவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மஹஓய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூலம் 50 கிலோ அடங்கிய 111 உரப்பொதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனை மூலம் பெறப்பட்ட 277,000 ரூபாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள்   தெஹியத்த கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்  .

சம்பவம் தொடர்பில் மஹஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

ஜம்மு – காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கைக்கு எதிர்ப்பு இல்லை

Next Post

சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் கைது

Next Post
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures