Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் வீடுகளை விட்டு விலகல்

July 31, 2017
in News, Politics
0
உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் வீடுகளை விட்டு விலகல்

முல்லைத்தீவு – துணுக்காய் உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் போன்ற காரணங்களால் வெளியேறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீட்டுத் திட்டத்தில் தற்போது 20 வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் சொந்தக்காணிகள் இன்றி வாழ்ந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்படி இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தின் மாதிரிக் கிராமத்தில் 50 வரையான குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

குறித்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இன்மை, குடிநீர் வசதிகள் இன்மை, மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பின்மை, காட்டு யானைகளின் தொல்லை போன்ற காரணங்களால் இங்கிருந்து வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த மாதிரி வீட்டுத்திட்டத்திலிருந்த ஐம்பது வரையான குடும்பங்களில் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு குடிப்பெயர்ந்துள்ளன.

மேலும் தலா பத்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் யாவும் உரிய முறையில் அமைக்கப்படாமல் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இந்த வீடுகளில் வாழ முடியாத சூழல் காணப்படுவதாகவும், குறித்த வீடுகள் அமைக்கப்பட்டு நான்கு வருடங்களுக்குள்ளேயே சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் வீடுகளை புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

1223 முறைப்பாடுகள் கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post

கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து – கிளிநொச்சி ,முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!!

Next Post

கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து - கிளிநொச்சி ,முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures