Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே பல தாக்குதல்கள் இடம்பெற்றன – சம்பிக்க

June 18, 2019
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் எனவும் அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குருநாகல் நகர மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.

எனினும், இந்த விடயம் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்கள் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறினார். நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து இன மக்களும் நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Previous Post

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

Next Post

இலஞ்சம் வழங்கியவருக்கு பிணை!

Next Post

இலஞ்சம் வழங்கியவருக்கு பிணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures