Saturday, May 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்

July 28, 2017
in News, World
0
உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

விலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும், எதிராகவும,; அவற்றின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும்; குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும், அமைப்புக்களும்;; கொலை வெறி பிடித்த இஸ்ரேல்; படைகளினால் பலஸ்தீனத்தில் உயிர்கள் அறுவடை செய்யப்படுவதை தடுப்பததற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதற்காக வரிந்துகட்டிக்கொண்;டு அவற்றிற்காகச் செயற்படுகின்ற, அறிக்கைளை விடுகின்ற மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்தீனத்தின் உரிமைகளை மீறிவரும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டும் காணமல் இருக்கிறது.

உலகளவில்; 36 மனித உரிமைகள் அமைப்புக்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்று செயற்படுகின்றன. அவற்றோடு ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த 5 மனித உரிமைகள் அமைப்புகளும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் வேளை ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலிலும் 6 மனித உரிமைகள் அமைப்பு இயங்குகின்றன. இந்நிலையில், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறக்கணித்து பல தசாப்த காலமாக பலஸ்தீன மக்களின் மத, சமய. குடியியல், தொழில் என அத்தனை உரிமைகளையும் மறுத்து அம்மக்களை துப்பாக்கிகளினாலும் குண்டுகளினாலும்; சல்லடைபோடும்; இஸ்ரேலுக்கு எதிராக இம்மனித உரிமை அமைப்புக்களில் எத்தனை அமைப்புக்கள் குரல் எழுப்பி இருக்கின்றன?

சர்வதேச சட்டங்களும் மனித உரிமைகள் அமைப்புக்களும் மௌனித்திருக்கும் நிலையில், வந்தேறு குடிகளான இஸ்ரேலிய கல்நெஞ்சம் கொண்ட கொலை வெறியர்களினால் வளரும் பஞ்சிளம் பாலகர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுவதை தடுப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஐ.நா.வும் அதன் பாதுகாப்புச் சபையும் அவற்றின் அதிகாரங்களை இஸ்ரேல் அரசுக்கு எதிராக பிரயோகிக்காமல் இருப்பது ஏன்?

அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் வளர்ப்புப் பிள்ளையான இஸ்ரேல் காலம் காலமாக பலஸ்தீன மக்களைப் பந்தாடி வருவதை உலகின்; ஜனநாயக அரசுகள் பார்வையாளர்களாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறதா? என்ற கேள்விகளை மனிதாபிமானம் உள்ள மானிட வர்க்கம் எழுப்புகின்ற போதிலும், இஸ்ரேல் படைகளின் உயிர் அறுவடைக் காணொளிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றபோதிலும,; உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா.வும் அதன் அமைப்புக்களும் இன்னுமே இஸ்ரேல் முன்னெடுக்கும் அத்துமீறல்களுக்கும் உயிர் அறுவடைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இருப்பினும்,; வரலாறு நெடுங்கிலும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு முன்னெடுக்கும் நெருக்குவாரங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக ஒரு சில மனித உரிமைகள் அமைப்புக்கள் அறிக்கைகளை விடுவதுடன் அவற்றின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

இஸ்ரேலின் வரலாற்று நெருக்குவராங்கள்;

1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வல்லரசுகளின் அழுத்தங்களின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சட்ட விரோதமாக அரபு மண்ணில் ஸ்தாபிக்கப்பட்ட இ;ஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் நெருக்குவாரங்கள்; வரலாற்று நெடுங்கிலும் பலஸ்தீன மண் மீதும் மக்கள்; மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பலஸ்தீன் மீதான ஆக்கிரப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடங்கிய 1948ம் ஆண்டு முதல் இற்றை வரையான 69 வருட காலப்பகுதியில் பல்லாயிரக்காணக்கான இன்னுயிர்களின் உதிரங்களினால் பலஸ்;தீன மண் செந்நிறமாக்கப்பட்டிருக்கிறது. கோடானகோடி சொத்தழிவுகளை அம் மண் இழந்துள்ளது.

1948 முதல் 1949 வரையான ஒரு வருட காலப் பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடி, அட்டூழிய தாக்குதல்; நடவடிக்கைகளி;ன் காரணமாக பலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர் இழந்தும், 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்; காயமும்;பட்டனர். இவ்வாறு உயிர் இழந்த, காயப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்களாவர்

இந்நிலையில்தான், ஜேர்த்தானினாலும் எகிப்தினாலும் ஆளப்பட்ட பஸ்தீனத்தின் மேற்குக்கரையும் காஸாவும் இணைந்ததாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்கினால் பலஸ்தீன் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அரபு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல,; 69 வருட காலப் பகுதியில் 275 தடவை பலஸ்தீன் மீது தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பலஸ்தீன மண்ணில் வாழும் பலஸ்தீனர்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் அழித்துவிட்டு முழு பலஸ்தீன மண்ணையும் கபளிகரம் செய்ய முயற்சிக்கும் இஸ்ரேல், போராட்ட வரலாறுகளை மறந்து செயற்படுகிறது. தேச விடுதலைக்காக போராடுகி;ன்றவர்களை அடியோடு அழித்த வரலாறு இந்ந பூமியில் இல்லை. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் ஒரு உயிர் வாழும் வரை இன அழிப்பாளர்களுக்கெதிரான போராட்டம் தொடரத்தான் செய்யும்.

பலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததிகளான சிறுவர்களையும், இளைஞர்களையும் அறுவடை செய்துவிட்டு பலஸ்தீனத்தைக் கபளிகரம் செய்ய நினைக்கும் இஸ்ரேலும் அதற்கு துனைநிற்கும் நாடுகளும் வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

பலஸ்தீன சிறுவர்களும் இஸ்ரேலின் உயிர் அறுவடையும்

1948ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அல்லது ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 6000க்கும் மேற்பட்டடோர் காயமுமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 200 பேர் சிறுவர்களாகவும் காயப்பட்டவர்களிலும் அதிகளவிலானோர் சிறுவர்களாகவுமே இருந்தனர்.

ஒவ்வொரு வருடத்திலும் இஸ்ரேலினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது உயிர் இழந்தவர்களின், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீதத்தினர் சிறுவர்கள்தான். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் பின்னணியில் ; பலஸ்தீன எதிர்கால சந்ததியினர்களான சிறுவர்களை அழிக்கும் இஸ்ரேலின் சதித்திட்டம் புலப்படுகிறது.

அரேபிய முஸ்லிம்களின் அமைதிப்பூங்காவாக விளங்கிய பலஸ்தீனத் தேசத்தில் பலாத்காரமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், பலஸ்தீன் மீது தொடர்சியாக அழுத்தங்களை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டு வந்தது. இதனால் பலஸ்தீன மக்களின் தொழில், கல்வி, பொருளாதார, சுகாதார, வாழ்வாதார நடவடிக்கைகள் யாவும் முடக்கப்;பட்டுள்ளன.

இஸ்ரேலின் நிலப்பரப்பிலிருந்து காஸாவுக்குக் கிடைக்கின்ற மனிதாபிமான அடிப்படைத் தேவையாகிய நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது. இதனால் பலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

2007ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீதமான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 3,900 தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த 35ஆயிரம் பலஸ்தீனிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்பட்ட வீதத்தினர் தொழிலற்றவர்களாகக் காணப்பட்டனர். அத்Nதூடு காசாவிலும், மேற்குக்கரையிலும் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு சட்டவிரோத குடியிருப்புக்களை தொடர்ச்சியாக இஸ்ரேல் இன்று வரை முன்னெடுத்து வருகிறது.

இஸ்ரேலின் நெருக்குவாரங்களும், அட்டூழியங்களும்,; தாக்குதல்களும் தரை, கடல், வான் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1967முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலியர்களினால் கொல்லப்பட்டவர்களின்; எண்ணிக்கை 7,978 ஆகும். இதில் 1,620 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.

2007ஆம் ஆண்டில் பலஸ்தீன சனத்தொகையில 17 வீதத்தினர் 5 வயதுக்குக் குறைந்தவர்கள.; 46 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள். காஸாவின்; 1.7 மில்லியன் சனத்தொகையில் 8 இலட்சம் பேர் சிறுவர்களாவர். எதிர்கால பலஸ்தீன சந்ததிகளின் வளர்ச்சி, அதிகரிப்பு இஸ்ரேலுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் பாடசாலைகளையும், பாடசாலை செல்லும் மாணவர்களின் பஸ்களையும் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களையும் தமது கொடூர தாக்குதல்களின் ஊடாக கொண்டழித்து வருகிறது இஸ்ரேல் என்பதை மறுக்க முடியாது.

ஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பின் தகவல்களின் பிரகாரம். 2013ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலப் பகுதிக்குள் 12 வயதுக்கு குறைவான 7,000 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 12 முதல் 17 வயதுக்குட்ட 7,000 சிறுவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யபபடுவதாக சர்வதேச ஆய்வறிக்கைகள்; சுட்டிக்காட்டுகின்றன.

சர்வதேச சிறுவர் உரிமைகளுக்கான சட்டங்களையும் மீறி கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கெதிராக போலிக் குற்றச்சாற்றுக்களைச் சுமத்தி நீதி மன்றங்களினால் தீர்ப்புகளையும் இஸ்ரேலிய இரும்பு இதயம் கொண்ட இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.

கைது செய்வதும,; கொண்டழிப்பதும் என சிறுவர்களை இழக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலஸ்தீன எதிர்கால சந்ததி அந்த மண்ணில் வாழக்கூடாது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. சிறுவர்கள் உலகில் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்காக ஐ,நா.வினால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் சிறுவர் உரிமைகளை மீறுவோறுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் எந்தளவு தூரத்தில் பலஸ்தீன சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பிலும் கைது செய்யப்படுவது தொடர்பிலும் கொல்லப்படுவது தொடர்பிலும் செயற்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியதாகும்.

இஸ்ரேலின் அக்கிரமங்களினால் பலஸ்தீனத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிறுவர்களை வாழ விடாது அவர்களை வளர விடாது அழிப்பதன்; பின்னணி என்ன? என்பதற்கான விடையினை மிக வெளிப்படையாகவே இஸ்ரேலிய ஆட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கடந்த காலங்களில்; இஸ்ரேலிய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

இது தவிர, காஸாவிலும,; மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் அத்துமீறல்களும் தாக்குதல்களும் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மனவடு உளநோயினால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைப் பாதிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டும் சர்வதேச ஆய்வறிக்கைகள் காஸாவில் 54 வீதமான சிறுவர்களும் மேற்குக் கரையில் 43 வீதமான சிறுவர்களும் இந்த உளப்பிரச்சினையினால் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

வரலாற்று நெடுங்கிலும் தொடரும் இஸ்ரேலின் நெருவாரங்களும் தாக்குதல்களும் சிறுவர்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014 ஜுலை மாதம் இஸ்ரேலிய சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு அதற்கு பலி தீர்க்கும் திட்டத்திற்கேற்ப பலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் 3 பலஸ்தீன சிறுவர்கள் சுட்டும் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து உருவெடுத்த போரானது 2000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் அவ்வாண்டில் காவுகொண்டது. இதில் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டார்கள். பாலகர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என 1000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாவும் ஆக்கப்பட்டனர்.

அத்தோடு,; பள்ளிவாசல்கள், குடியிருப்புக்கள், தொழில் நிறுவனங்கள் பொருளாதார மையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார நிலையங்கள் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் என பல இடங்கள் அழிக்கப்பட்டு பலஸ்தீன் மக்கள் சகலவற்றிலும் முடமாக்கப்பட்டனர். இவ்வாறு காஸா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் கொடூர படைகளின் துப்பாக்கி சன்னங்களுக்கு 2015ல் 200க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் 2016ல் 100க்கு மேற்பட்டவர்களும் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பலஸ்தீன மண் சட்டவிரோதமாக கபளிகரம் செய்யப்பட்ட தினம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை கொல்லப்பட்டவர்களில் கனிசமானவர்கள் பலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததியினர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் இனவெறியர்களினால் அறுவடை செய்யப்பட்டுள்ள பலஸ்தீன உயிர்களுடன் ஒப்பிடுகையில் பலஸ்தீனப் மண்மீட்புப் போராளிகளினால் கொல்லப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை புறக்கணிக்கத்தக்கது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறான நிலையில்தான் கடந்த இரு வாரங்களாக முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா மூடப்பட்டு இஸ்ரேலின் சட்டங்களின் கெடுபிடியினால் முஸ்லிம்களின் மத வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

மஸ்;ஜிதுல் அக்ஸாவும் சமகால பலஸ்தீனமும்.

பல நூறு நூற்றாண்டுகால வரலாற்றுப் பாரம்பரியமிக்க பலஸ்தீனத்தின் ஜெரூசலம் நகரிலுள்ள முதலாவது கிப்லாவும் இப்பூமியில் இரண்டாவதாக கட்டப்பட்டதுமான புனித மஸ்ஜிதுல் அக்ஸா 1967ஆம் ஆண்டு பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கிடையிலான போரைத் தொடர்ந்து இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டது. புனித பைத்துல் முகத்தஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 50 வருடங்களாகி விட்டன. இப்புனித பள்ளிவாசல் கைப்பற்றப்பட்ட தினம் முதல் இன்று வரை இப்புனித மஸ்ஜித்தின் புனிதத்தை மாசுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதுமாத்திரமின்றி இப்புனிததளத்தினை அண்டிய பிரசேதங்களிலுள்ள இஸ்லாமிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேலிய அரக்கர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான், கடந்த 14ஆம் இஸ்ரேலிய படையினர் இருவரை பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதற்காக மூன்று பலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய படையினரினால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைச் தொடர்ந்து புனித இறை இல்லமான மஸ்ஜிதுல் அக்ஸாவை இழுத்து மூடிய இஸ்ரேலிய படையினர் இப்புனித இறை இல்லத்தின் பேஷ் இமாமையும் வெளியேற்றியுள்ளனர்.

இதனிடையே, புனித பள்ளிவாசல் நுழைவாயிலில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டிருக்கும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலஸ்தீனர்கள் நிராகரித்து வருகின்றனர். இந்நிலையில்தான்; கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை ஜெரூஸலத்தின் வீதியில் மேற்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பல நூறு முஸ்லிம்கள் இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காலத்திற்குக்காலம் நெருக்கடிகளை உண்டாக்கி பலஸ்தீனர்களை அறுவடை செய்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை தற்போதைய ஐ.நா.வின் செயலாளர் அந்தோனி கட்டரஸஸ் கண்டித்துள்ளதுடன் ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்டுள்ள இஸ்ரேல்  பலஸ்தீனம் குறித்த இரு மாநிலத் தீர்வை பாதுகாக்க அனைத்தும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் சர்வதேச ஊடகங்கள் பலஸ்தீனத்தின் உண்மை நிலைய திரிவுபடுத்தி வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்நிலையில், புனித மஸ்ஜிதுல் அக்ஸா மூடப்பட்டுள்ளதுடன் தொடங்கியுள்ள அசாதாரண சூழ்நிலை இஸ்ரேலால் மேலும் பல பலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததியினர் அறுவடைய செய்யப்படாதிருக்கவும், புனித இறை இல்லம் மாசுபடுத்தபடாமல் இருக்கவும், மஸ்ஜிதுல் அக்ஸா மீட்கப்படவும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதே நமக்குண்டான ஒரே வழியாகும்.

Previous Post

நல்லாட்சி அரசின் அரசியல் வியாபாரப் பொருளான வஸீம் தாஜூதீன் !

Next Post

முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

Next Post
முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து  செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

May 31, 2025
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

May 31, 2025
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

May 31, 2025
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

May 31, 2025

Recent News

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

May 31, 2025
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

May 31, 2025
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

May 31, 2025
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

May 31, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures