மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியின் இடைவெளிக்கே நீதிபதி யசந்த கோதாகொடவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

