Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி வளங்கல் நிறுத்தம் !

February 21, 2018
in News, Politics, World
0

அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டத்தை ரத்துச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

டெப் கணனி கொள்வனவு செய்ய அமைச்சு பின்பற்றிய ஒழுங்கு முறையில் உள்ள சிக்கல் நிலைமை அத்திட்டத்தை ரத்துச் செய்வதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தர வகுப்பில் கல்வி பயிலும் அரச பாடசாலை மாணவர்களுக்கும், உயர் வகுப்பு ஆசிரியர்களுக்கு 2 லட்சம் டெப் கணனி கொள்வனவு செய்யும் திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு முன்னெடுத்த திட்டத்தில் உள்ள சிக்கல் நிலைமையினால் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் நடைமுறைப்படுத்தவிருந்த இத்திட்டம், இவ்வருடம் ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல் தன்மையை அடிப்படையாக வைத்து இதனை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த டெப் ரக கணனிகளை கொள்வனவு செய்யவென அரசாங்கம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி இடை நிறுத்தம்

Next Post

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம்

Next Post

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures