Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது

November 14, 2019
in News, Politics, World
0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் தம்பிராசா என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வெளிநாடுகளில் ஒரு நாளைக்கு முன்பே வெளியாகும் ஆதித்ய வர்மா

Next Post

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

Next Post

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures