Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணம்

February 5, 2020
in News, Politics, World
0
உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணம்
நாட்டின் பண வீக்கம் கடந்த வருட ஜனவரி மாதத்தையும் பார்க்க இவ்வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கம் வட் வரியை குறைத்தும் மக்களுக்கு அதன் நன்மை கிடைக்காமல் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில தினங்களில் மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைப்பதற்காக வட்வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இருந்தபோதும் மக்களின் அன்றாட உணவுப்பொருட்களுக்கான விலையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. வாழ்க்கைச்செலவும் அதிகரித்திருப்பதாகவே அறியமுடிகின்றது.
அத்துடன் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதத்திற்கும் பார்க்க ஜனவரியில் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த வருடம் ஜனவரி மாதத்திற்கும் பார்க்க இந்த வருட ஜனவரி மாத பணவீக்கம் அதிகரித்திருக்கின்றது. உணவுப்பொருட்களுக்கான விலை அதிகரிப்பே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணமாகும்.
இருந்தபோதும் தற்போது நெல் அறுவடை காலம் ஆரம்பித்திருக்கின்றது. அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து முறையாக நெல்லை பெற்றுக்கொண்டு விலை நிர்ணயமொன்றை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயிக்கலாம்.
மேலும் அரசாங்கம் வட்வரியை குறைத்தாலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களுக்குகூட வரி குறைப்பின் நன்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களும் தற்போது விரக்தியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
Previous Post

முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் மனைவிக்கு பல மில்லியன் டொலர்கள் லஞ்சம்

Next Post

மீட்கும் பணியில் ஈடுபட்ட விமான சேவை ஊழியர்கள் கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு!

Next Post
மீட்கும் பணியில் ஈடுபட்ட  விமான சேவை ஊழியர்கள்   கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு!

மீட்கும் பணியில் ஈடுபட்ட விமான சேவை ஊழியர்கள் கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures