Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈவிரக்கமற்ற முறையில் செயற்படும் பொலிஸார் | வீடியோ குறித்து பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

December 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈவிரக்கமற்ற முறையில் செயற்படும் பொலிஸார் | வீடியோ குறித்து பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

குருநாகலில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்யும் வேளை பொலிஸார் அவரை மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அதேவேளை பொலிஸ் பேச்சார்  இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

டிசம்பர் 26 ம் திகதி குருநாகலின் டொரட்டியாவை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் போதைப்பொருட்களை வைத்திருத்தல் களவு போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்தனர் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வீடியோவில் காணப்படும் நபர் போதைப்பொருளிற்கு அடிமையானவர் போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளவர் அவரை கைதுசெய்தவேளை அவரிடம் 2 கிராம் ஹெரோயின் காணப்பட்டது அவரை கைதுசெய்ய முயன்றவேளை அவரை பொலிஸார் தாக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் சந்தேகநபர்ஒருவரை பொலிஸார் மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோவொன்று சமூக ஊடகங்களில்வெளியாகியுள்ளது.

நான் தப்புவதற்கு முயற்சிக்க மாட்டேன் என அந்த நபர் தெரிவிக்கின்ற போதிலும் பொலிஸார் அவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்றனர்.

இரண்டு பொலிஸார் நிலத்தில் ஒருவரை மடக்கிபிடித்தபடி அவரை கயிற்றால் கட்டுவதற்கு முயல்வதை வீடியோவில் பார்க்க முடிகின்றது.

ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரின் மேல் அமர்ந்திருக்கின்றார் மற்றைய பொலிஸ்உத்தியோகத்தர் அவரை கயிற்றால் கட்ட முயல்கின்றார்.

அவ்வேளை சந்தேகநபர் அலறுவதையும் தனது கழுத்தை விடுமாறு மன்றாடுவதையும்  அவதானிக்க முடிகின்றது.

சந்தேகநபரின் காலை கட்டும் பொலிஸ்உத்தியோகத்தர் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சந்தேகநபர் தப்பமுடியாது என தெரிவிக்கின்றார்.

எனினும் சந்தேகநபர் மீது அமர்ந்திருக்கும்  பொலிஸ்உத்தியோகத்தர் சந்தேகநபரை விட மறுப்பதுடன் அவரின் கைகளையும் கட்டுமாறு கேட்கின்றார்.

பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரை பிடித்து வைத்து தாக்கும் வேளையில் சந்தேகநபர் தான் தப்பியோடமாட்டேன் என அலறுவதை அவதானிக்க முடிகின்றது.

Previous Post

13 வயது பாடசாலை மாணவர்களை விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியை கைது

Next Post

அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

Next Post
அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures