Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம்

March 16, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம்

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமலும் இப்பெண்கள் காணப்பட்டனர்.

தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள் ஐவர் நடனமாடியுள்ளனர். இவர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோ டெலிகிராம் மற்றும் டுவிட்டரில் வெளியாகின. நைஜீரிய பாடகர் ரேமாவின் ‘காம் டவ்ன்’ எனும் பாடலுக்கு இவர்கள் நடனமாடினர்.

சர்வதேச மகளிர் தினமான கடந்த 8 ஆம் திகதி இந்த வீடியோ டிக்டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

ஈரானில் பெண்கள் பகிரங்கமாக நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தலையை மறைக்கும் ஹஜாப் ஆடை அணியாமல் பொது இடங்களில் காணப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பெண்களை அறிவீர்களா என, பிரதேசவாசிகளிடம் ஈரானிய அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேற்படி நடன வீடியே தொடர்பில் கவலை தெரிவித்து வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.

மேற்படி வீடியோ வெளியான பின்னர் தலையை மறைக்கும் வகையில் ஆடையணிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. முதல் வீடியோ பதிவு செய்யப்பட்ட இடத்தில் இந்த வீடியோவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், 2 ஆவது வீடியோவையோ அது பதிவுசெய்யப்பட்ட சூழ்நிலையையோ உறுதிப்படுத்த முடியவில்லை என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

மேற்படி பெண்கள் விடுவிக்கப்பட்டனரா என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

தெஹ்ரான் நகரில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயதான யுவதி கடந்த செப்டெம்பர் மாதம் பொலிஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தியாவின் கார்பன் உமிழ்வு உலக அளவை விட மிகக் குறைவு

Next Post

இந்தியநாடாளுமன்றத்தில் கடும் அமளி

Next Post
இந்தியநாடாளுமன்றத்தில் கடும் அமளி

இந்தியநாடாளுமன்றத்தில் கடும் அமளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures