Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது…! மகிந்த கவலை

March 3, 2026
in News, Sri Lanka News, World, முக்கிய செய்திகள்
0
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் நெருங்கிய நண்பராகச் செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்நோக்குத் திட்டம்

இதனடிப்படையில், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு மற்றும் உமா ஓயா பல்நோக்குத் திட்டம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு அவர் முக்கிய பங்காற்றினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது...! மகிந்த கவலை | Mahinda Rajapaksa Condoles Mahmoud Ahmadinejad

இந்த நிலையில், வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் குடும்பத்தினருக்கும் மகிந்த தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர நேரத்தில் அனைத்துத் தரப்பினரும் போரின் பாதையைத் தேர்ந்தெடுப்பதை விட நிதானத்தையும் மற்றும் பேச்சுவார்த்தையையும் கடைப்பிடிக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஈரான் மசூதியில் பறக்கும் சிவப்புக் கொடி! ; காரணம் என்ன?

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures