Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

September 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 2021/2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பன தொடர்பில் காணப்பட்ட இடநேர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பணம் தூயதாக்கல் 

இலங்கையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பவற்றுக்கான சாத்தியப்பாடு நடுத்தர அளவில் இதில்  மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Central Bank Of Sri Lanka Special Announcement

இந்த இடநேர்வு அறிக்கையானது இலங்கையில் பதிவான பணம் தூயதாக்கல் முறைமைகள், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல், இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், இத்தகைய செயற்பாடுகளுக்கான இடர்நேர்வுகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

இம்மதிப்பீட்டின் பிரகாரம் போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அவற்றுக்கு மேலதிகமாக மோசடிகள், கொள்கை, சூழல் மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த குற்றங்கள், ஆட்கடத்தல், வரிக்குற்றங்கள், சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் என்பனவும் பணம் தூயதாக்கலுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு, நாட்டில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்க நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிரான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.    

Previous Post

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவேண்டும் : ஜே.வி.பி. வலியுறுத்து

Next Post
அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவேண்டும் : ஜே.வி.பி. வலியுறுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures