Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை அரசின் கோரிக்கையை மறுத்த அல் ஹுசைன்

March 18, 2018
in News, Politics
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கைக்கு அமைய இலங்கையின் முன்னேற்ற மதிப்பீடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் எழுத்து மூலம் சமர்ப்பிக்கவுள்ளது.

அன்றைய அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

2015 ஒக்டோபர் 1 ஆம் திகதியிடப்பட்ட 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவை, அதன் 34 ஆவது அமர்வில் (2017 பெப்ரவரி 27 – மார்ச் 24 ஆம் திகதி வரை) 2017 மார்ச் 23 ஆம் திகதியன்று 34/1 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

இந்த தீர்மானத்தின் மூலம் பேரவையானது, உயர் ஆணையாளர் அலுவலகத்திடம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் மனித உரிமைகள் பேரவையிடம் அதன் 37 ஆவது அமர்வில் எழுத்து மூலமான அறிக்கையொன்றை சமர்ப்பித்தல் போன்ற முன்னேற்ற மதிப்பீடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தது.

பேரவையின் கோரிக்கைக்கு அமைய, உயர் ஆணையாளர் அலுவலகம் 2018 மார்ச் 21 ஆம் திகதி எழுத்து மூலமான அறிக்கையை பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

பேரவையின் 37 ஆவது அமர்வு 2018 பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

நாளை 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரவையின் 37 ஆவது அமர்வில் அனைத்துலக காலாந்தர மீளாய்வின் 3 ஆவது சுழற்சியின் கீழ் இலங்கையின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (RPS) அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

5 ஆண்டுகளுக்கொரு முறையும் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் அனைத்தினதும் மனித உரிமைகள் பதிவுகளின் காலாந்தர மீளாய்வை உள்ளடக்கிய தனிப்பட்ட செயன்முறையாக இந்த அனைத்துலக காலாந்தர மீளாய்வு திகழ்கின்றது.

இம்முறை ஆரம்பமாகியிருக்கும் 37 ஆவது அமர்வில் இலங்கை விடயம் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கையில் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் பற்றிய விவாதத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர்.

இதில் தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் அரச தரப்பிலுமாகப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அமர்வுக்குப் புறம்பாக உப குழுக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அவ்வாறு நடைபெற்ற ஓர் உப குழுக்கூட்டத்தில், 2015 ஆம் ஆண்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மந்தநிலை காணப்படுவதாக சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜெஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக நடைபெற்ற இந்த விசேட உப குழுக்கூட்டத்தின் போது தென்னிலங்கை ‘எளிய’ அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் ஜெஸ்மின் சூக்காவுடன் முரண்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யத் அல் ஹுசைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நேரம் ஒதுக்கிக் கேட்டிருந்த போதிலும் ஆணையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் விளக்கத்தையும் அமர்வின் போது தெரிவிக்க முடியும் என்று ஆணையாளர் ஹுசைன் தெரிவித்துவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஜெனீவா அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்கத்தின் உயர் மட்டக் குழு நாளை ஜெனிவா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒவர் கைது

Next Post

தேர்தல் செயலகத்தின் இணையக் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல்

Next Post

தேர்தல் செயலகத்தின் இணையக் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures