Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

இலங்கையில் அரங்கேற்றப்படும் மறைமுக சூழ்ச்சி! பலியாகப் போவது மைத்திரியா? மஹிந்தவா? ரணிலா?

May 29, 2016
in Politics
0

இலங்கையில் அரங்கேற்றப்படும் மறைமுக சூழ்ச்சி! பலியாகப் போவது மைத்திரியா? மஹிந்தவா? ரணிலா?

இலங்கை அரசியல் மட்டத்தில் தற்போது பல்வேறு கோணங்களில் சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதான கட்சிகளின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தை உடைந்து தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

இதனொரு அங்கமாக அண்மையில் அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ்.பீ.திஸாநாயக்க ஆகியோரின் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளது.

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனையை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கமைய, ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இவர்களின் கருத்து பரிமாற்றலின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி ஒன்று செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்கி மாநில ஒற்றுமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வது அவசியம் என கூறப்பட்டது. இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சிப்பதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது செயற்படுத்தப்படாத போதிலும், 13ஆம் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு சொந்தமானதாக உள்ளன.

ஜனாதிபதி முறையை தொடர்ந்து நடத்தி செல்வதென்றால் பொலிஸ் அதிகாரம் இன்றி காணி அதிகாரத்தை மாத்திரம் வழங்குவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உபாயத்தின் மூலம் பல நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்பார்த்துள்ளதாக தெரிய வருகிறது.

பிளவடைந்துள்ள சுதந்திர கட்சியை இதன் ஊடாக இணைத்து கொள்வது இதன் பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசிய கட்சியில் பிரச்சினையை ஏற்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதே இதன் இரண்டாவது நோக்கமாகும்.

காணி அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக சிறுபான்மையினரை இணைத்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது மூன்றாவது நோக்காகும்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பை ஒன்றை உருவாக்குவதற்காக பெறப்பட்ட மக்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் வைத்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கமைய பொலிஸ் அதிகாரம் இன்றி காணி அதிகாரம் உள்ளடக்கப்பட்டு, மாகாண சபை அதிகாரங்களை விரிவுபடுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானிப்பதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக தங்கள் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தங்கள் குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தாக ஒப்பந்தத்திற்கமைய மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற ஆயத்தமாகுவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இணைப்பதற்கு தடையாக உள்ள மஹிந்த தரப்பை நீக்கிவிட்டு முன்னோக்கி செல்வதற்கு தற்போது வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous Post

புதுக்குடியிருப்பில் மாபெரும் முத்தமிழ் விழா! திரைப்பட நடிகர் நாசர் பங்கேற்பு

Next Post

இராணுவத்தினரை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு!

Next Post

இராணுவத்தினரை தடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

June 17, 2026
மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026

Recent News

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

June 17, 2026
மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures