Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் பாதுகாப்பு உறுதிபெற பயங்கரவாத தடைச்சட்டமே காரணமாம் | கமல் குணரத்ன

December 17, 2021
in News, Sri Lanka News
0
எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுவதுடன், சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அமைய ஒரு சில மாற்றங்களை முன்னெடுக்க நாம் முயற்சித்தாலும், சர்வதேச சமூகம் முன்னுக்குப்பின் முரணான வகையில் செயற்படுகின்றனர் எனவும் கூறினார்.

கடந்த ஈராண்டு காலத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் அதன் காரணிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் ஆழமாக ஆராய்ந்து, இந்த விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற நபர்களிடம் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு, எமக்கு உதவும் சர்வதேச நாடுகளிடமும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு இந்த செயற்பாடுகளில் நடவடிக்கை எடுத்தோம்.

அதேபோல் இந்த விடயத்தில் சர்வதேச தரப்பு முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என ஒரு தரப்பும், சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என இன்னொரு தரப்பும் கூறுகின்றனர். ஆனால் இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மைகளையும், ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது என்றே கூற வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளதனாலேயே நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தைரியமாக கூற முடிகின்றது.  பாதுகாப்பு செயலாளராக இது எனது நிலைப்பாடாகும்.

அவ்வாறான நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது மாற்றங்களையோ, திருத்தங்களையோ முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச தரப்பு எமக்கு கூறுகின்ற வேளையில் அரசாங்கம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இது குறித்து ஆராயவும் இரண்டு ஆணைக்குழுக்களை நியமித்தது. இதில் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாக தொடர்புபட்ட நபர் என்ற ரீதியில் எனது பங்குபற்றளில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத விதத்தில் எவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது என்பதை நாம் ஆராய்ந்ததுடன், இது குறித்த அறிக்கையை மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தோம்.

அதேபோல் பாராளுமன்ற குழுவொன்றும் நியமிக்கப்பட்டு  பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இவ்விரு அறிக்கைகளின் பின்னர் நீதி அமைச்சு இந்த விடயங்களில் கவனம் செலுத்தி ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் காரணிகளை வெளிப்படுத்தும். பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை நீதி அமைச்சு முன்வைக்கும்.

இந்த விடயங்களில் சர்வதேச தரப்பினர் ஒரு காரணியை வெளிப்படுத்தி அறிக்கையொன்றை முன்வைக்கையில் அதற்கு நாம் பதில் தெரிவிக்க தயாராகும் வேளையில், அது குறித்த வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக மற்றப்பக்கத்தில் வேறொரு அறிக்கைவை முன்வைத்து முற்றிலும் மாறுபட்ட காரணிகளை வலியுறுத்துகின்றனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை மீண்டும் அரச அதிகாரிகளாக மாற்றி இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆகவே இவ்வாறான நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலேயே நாம் செயற்பட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நல்லூர்க் கந்தனும் சீனத் தூதுவரும் | கிரிஷாந்த்ராஜ்

Next Post

ஜவ்வரிசியில் சுவையான போண்டா

Next Post
ஜவ்வரிசியில் சுவையான போண்டா

ஜவ்வரிசியில் சுவையான போண்டா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures