தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று வருகைதரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
அத்துடன், படைத்தரப்பு முக்கியஸ்தர்களையும் அவர், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

