Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு முதலில் உதவியது இந்தியாதான் | ஜெய்சங்கர்

December 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா ஒரு பிராந்திய தலைவர்மாத்திரமில்லை அதன் அண்டைநாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதிக்கொண்டிருந்தவேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவமுன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் இயல்பானநன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்ள நாடுகளே

உங்களிற்கு தெரியும் கடந்த சில வருடங்களாக – நாங்களே கொவிட்டினால் நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்றால்  எங்களின் அயல்நாடுகள் மிகச்சிறியவை,அவர்களிடம் எங்களை போல கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை.

நாங்கள் முன்வந்து உதவியிருக்காவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை பெறும் விடயத்தில் அவர்கள் கைவிடப்பட்டிருப்பார்கள் .

இலங்கை போன்றதொரு நாடு மிகமோசமான ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது,

உதவிசெய்யவேண்டிய உலகமும் உலக நாடுகளும் நிறுவனங்களும் என்ன செய்வது என்ற தங்களிற்குள் விவாதித்துக்கொண்டிருந்தவேளை  இந்தியாவே உதவிவழங்கியது.

எங்களின் நீட்டப்பட்ட கரங்களே இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான அவசியமான உதவியை வழங்கியது. நாங்கள் மிக முக்கியமான மாற்றத்தை  ஏற்படுத்தினோம்.

எங்கள் அயல்நாடுகளிற்கு சென்றவர்கள் ஏனைய மாற்றங்களை கட்டமைப்புமாற்றங்களை அவதானித்திருப்பீர்கள் -இடம்பெறுகின்ற ஆழமான மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள்,

உங்களால் இலகுவாக பயணம் செய்ய முடியும்,புகையிரதபாதைகள்  ஏறு;படுத்தப்பட்டுள்ளன, அதிகளவு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன -அவர்களும் எங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏனைய பிராந்தியம் முழுவதையும் உயர்த்திவிடும் வளர்ச்சிப்பாதையில் செலுத்துவதில் உதவுகின்றது.

நெருக்கடியான தருணங்களில்  உங்களிற்குஇந்தியா உள்ளது என்பதை அயல்நாடுகளிற்கு நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்தடுப்பூசியாகட்டும் உணவாகட்டும் நிதிஉதவியாகட்டும அத்தியாவசிய பொருட்கள் ஆகட்டும்.

இது அயல்நாடுகளிற்கு பெரும் செய்தியை சிறந்த செய்தியை சொல்கின்றது.

Previous Post

புதையல் தோண்டிய நால்வர் கைது

Next Post

பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

Next Post
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures