Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு மருந்துகளை வழங்கியது சீனா

June 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு மருந்துகளை வழங்கியது சீனா

பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனா வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கும் 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் ஊசி மருந்துகளில் முதலாவது கட்டமாக 256,320 ஊசிகள் நேற்று (03) நள்ளிரவு நாட்டை வந்தடைந்தன.

சீனாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் கடனுதவியின்கீழ் முதற்கட்டமாக 10 மில்லியன் யுவான் பெறுமதியான 512,640 உயிர்காக்கும் எனொக்ஸாபெரின் சோடியம் ஊசிகள் வழங்கப்படவிருப்பதுடன், அவை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுமென இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்திருந்த நிலையில், முதலாம்கட்ட பொதிகள் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தன.

அதன்படி 256,320 ஊசிகள் சி.எக்ஸ்-3119 என்ற விமானத்தின் ஊடாக நேற்று நள்ளிரவு கொழும்பை வந்தடைந்தது. 

எஞ்சிய 256,320 ஊசிகள் இம்மாதத்தின் பின்னரைப்பகுதியில் நாட்டை வந்தடையும் என்று சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த எனொக்ஸாபெரின் சோடியம் என்பது குருதியை ஐதாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற மருந்தாகும். 

இது மகப்பேற்று சத்திரசிகிச்சை மற்றும் அதனையொத்த சத்திரசிகிச்சைகள், மாரடைப்பு ஆகியவற்றின்போது பயன்படுத்தப்படும்.

இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த 512,640 ஊசிகளும் 6 மாதகாலத்திற்குப் போதுமானவையாகும் என்று இலங்கையிலுள்ள சீனதத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

பல நாள் கனவு நனவானது | வைரலாகும் சூர்யாவின் டுவிட்

Next Post

நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் நாளை பாடசாலைக்கு செல்ல முடியும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

Next Post
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் நாளை பாடசாலைக்கு செல்ல முடியும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures