ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று காலை 11 மணியளவில் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஹிந்த அணிக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

