ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு நடித்து வரும் கொரில்லா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை புறநகரில் நார்த் மெட்ராஸ் தெருக்கள் போன்று செட் போடப்பட்டு அதில் நடந்து வருகிறது.
ஜீவா, சதீஷ், ராஜேந்திரன் தொடர்பான காமெடி காட்சிகள், ஷாலினி பாண்டேவுடனான காதல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறியதாவது:
இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு, அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.
அந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தவுடன் ‘கொரில்லா ‘ படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும். என்றார்.