இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை (21) காலை 08.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 08.00 மணி வரை, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகியிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், ம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரக்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல மற்றும் கந்தேகெட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

