Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரா.சம்­பந்­தனை சிறி­லங்கா மு .கா. தலை­வர் அமைச்­சர் ரவூப் ஹக்­கீம் குழு சந்­தித்­த­னர்.

April 10, 2018
in News, Politics, World
0

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வர் அமைச்­சர் ரவூப் ஹக்­கீம் குழு­வி­னர் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சந்­தித்­த­னர்.

சிநே­க­பூர்­வ­மாக இடம்­பெற்ற இந்­தச் சந்­திப்­பில் கடந்த பெப்­ர­வரி மாதம் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் தொடர்­பி­லும், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­தும் வகை­யி­லும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சந்­திப்­பில் திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.எஸ்.தௌபீக், முன்­னாள் கிழக்கு மாகாண சபை­யின் தவி­சா­ளர் சட்­டத்­த­ரணி பாயிஸ், முன்­னாள் கிழக்கு மாகாண சபை­யின் கல்வி அமைச்­சர் சி.தண்­டா­யு­த­பாணி, எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் திரு­கோ­ண­மலை மாவட்ட இணைப்­பா­ளர் குக­தா­சன் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

சந்­திப்­பின் பின்­னர் அமைச்­சர் ஹக்­கீம் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­தார்.

“குச்­ச­வெளி பிர­தேச சபை­யில் ஆட்­சி­ய­மைப்­ப­தில் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தமது ஆத­ரவை வழங்­கா­த­போ­தும் அந்­தப் பிர­தேச சபை­யின் ஆட்­சியை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் தன­தாக்­கிக் கொண்­டது. எஞ்­சி­யுள்ள சபை­க­ளில் எங்­கெல்­லாம் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முடி­யுமோ அந்­தப் பிர­தே­சங்­க­ளில் பரஸ்­பர விட்­டுக் கொடுப்­பு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸும் இணைந்து செயற்­பட உடன்­பட்­டுள்­ளோம். இந்­தத் தேர்­தல் முறை­யில் உள்ள குறை­பாட்­டால் பிர­தேச சபை­க­ளின் ஆட்­சியை அமைப்­ப­தி­லும் சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன. சில இடங்­க­ளில் எமக்­குள் உடன்­பாட்­டுக்கு வர­மு­டி­யாத முரண்­பா­டு­கள் தோன்­றி­யி­ருந்­தன. இருந்­த­போ­தும் தலை­மைத்­துவ மட்­டத்­தில் இப்­போது நாங்­கள் புரிந்­து­ணர்­வு­ட­னான உடன்­பாட்­டுக்கு வந்­துள்­ளோம்.
மீத­முள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தில் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் ஒரு­மித்த நிலைப்­பாட்­டோடு செயற்­ப­டு­வது தொடர்­பில் இணங்­கி­யுள்­ளோம். சபை நட­வ­டிக்­கை­க­ளில் இணைந்து செயற்­ப­டு­வ­தோடு, பத­வி­க­ளை­யும் நியா­ய­மா­கப் பகிர்ந்­து­கொள்­ளும் அடிப்­ப­டை­யி­லும் பொது­வான உடன்­பாட்­டினை நாங்­கள் கொண்­டுள்­ளோம். இயன்­ற­வரை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸோடு விட்­டுக்­கொ­டுப்­பு­ட­னும், உச்­சக்­கட்ட புரிந்­து­ணர்­வு­ட­னும் இணைந்து பணி­யாற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ராக இருப்­ப­தை­யிட்டு எங்­கள் திருப்­தியை நாங்­கள் தெரி­வித்­தோம். மூதூர், தம்­ப­ல­கா­மம், கிண்­ணியா உட்­பட பல சபை­க­ளில் நாங்­கள் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பில் நிலை­யான உடன்­பாட்­டுக்கு நாம் வந்­துள்­ளோம்.”- என்று ஹக்­கீம் தெரி­வித்­தார்.

Previous Post

வாக்களிக்காத 25 பேர் வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருப்போம்

Next Post

தவ­று­க­ளைத் திருத்தி தீர்­வைப் பெறு­வோம்- சுமந்­தி­ரன் !!

Next Post

தவ­று­க­ளைத் திருத்தி தீர்­வைப் பெறு­வோம்- சுமந்­தி­ரன் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures