Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராமர் முடிசூடிய தினத்தில் மீண்டும் பதவியேற்கிறார் மோடி!

May 29, 2019
in News, Politics, World
0

இராமரின் முடிசூட்டு விழாவும் வியாழக்கிழமை அன்றுதான் நடைபெற்றது என்றும் விரைவில் இராமர் கோயில் கட்டப்படும் என்றும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.

அத்துடன் கடவுள் இராமரின் சிந்தனைகளைக் கொண்ட கட்சி மத்தியில் அதிகாரத்திற்கு வந்துவிட்டது என்றும், இராமரின் ஆசியோடு தேசத்தில் இராம இராஜ்யம் உருவாக்கப்படும் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்நிலையில், அவரின் பதவியேற்பு விழாவையும் இராமரின் பதவியேற்பு விழாவையும் ஒப்பிட்டு சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில், இராமர் கோயிலை கட்டி முடிப்பது என்பது சிறந்த தேசத்தை உருவாக்குவது போன்றது. இராமரின் வெற்றி ஊர்வலத்தை யாராலும் தடுக்க முடியாது.

உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடுதான் இராமர் கோயில் எழுப்பப்படும் எனும் பிரதமர் மோடியின் கூற்றை நாங்கள் ஏற்கிறோம். நீதிமன்றமும் மக்களின் எண்ணத்தை கருத்திற் கொண்டு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சாவகச்சேரி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!

Next Post

மட்டக்களப்பில் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

Next Post

மட்டக்களப்பில் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures