வித்யா பாலன், ஹிந்தியில் முன்னணி நடிகையில்லை என்றாலும், அவர் நடிக்கும் படங்கள், பெரிதும் பேசப்படும். சிறந்த நடிப்புக்காக, பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். ‘வித்யா பாலன் படமா; அதில் ஏதாவது விஷயம் இருக்கும்’ என, பாலிவுட் பிரபலங்களே பரவலாக பேசுவது உண்டு.
அப்படிப்பட்ட வித்யா பாலன், தெலுங்கில் அறிமுகமான, என்.டி.ஆர்., வாழ்க்கை வரலாற்று படத்தில், சிறிய வேடத்தில் நடித்து, சொதப்பி விட்டதாக, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி வித்யாவிடம் கேட்டால், ‘இந்த படத்தில், என்.டி.ஆரின் மனைவி கேரக்டரில் நடித்துள்ளேன். முதல் பாகத்தில் எனக்கு அதிகம் வேலையில்லை. ஆனால், இரண்டாம் பாகம் முழுவதும், என்னைச் சுற்றித்தான் கதையே அமைந்துள்ளது. அந்த படம் வந்தபின் பார்த்து விட்டு, அதற்கு பின், விமர்சனத்தை வையுங்கள்’ என, காட்டமாக பதில் அளித்துள்ளார்.