Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று முதற்தடவையாக கூடுகின்றது கோப் குழு

September 22, 2020
in News, Politics, World
0

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழு கூடவுள்ளது.

இதேவேளை, அரசாங்க கணக்குகள் குழு எனப்படும் கோபா குழு நாளைய தினம் (23) முதற்தடவையாக கூடவுள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, செயற்குழு உறுப்பினர்களுள் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார். பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் குழுக்களுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் பிற நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி ஒழுங்கமைப்பு ஆகியவற்றை கண்காணிப்பதே கோபா குழுவின் பணியாக அமைந்துள்ளது.

Previous Post

நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை நினைவுநாள்

Next Post

பத்து வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!- குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

Next Post

பத்து வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!- குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures