வவுனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம், இராமனூர் பகுதியில் நடந்தது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

