Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம்

February 20, 2018
in News, Politics, Uncategorized, World
0

சர்வதேசத்துடன் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது கட்சிகளுடனும் சிவில் சமூகங்கள், மதகுருமார்களுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் எத்தகைய கொள்கைகளை நாங்கள் முன்னெடுத்தோமோ அதனையே காத்திரமாக கொண்டு செல்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
“தெற்கில் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டால் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுப்பீர்கள் என கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெற்கிலே அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டால் சர்வதேசத்துடன் இராஜதந்திர ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். மற்றவர்கள் “கூறுவதுபோல் அல்லது செயற்படுவது போல் ஐ.நா. தீர்மானம் வந்தவுடன் எரிப்பதற்கோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்வதற்கே முயலமாட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது எமது கட்சிகளுடனும் சிவில் சமூகங்கள், மதகுருமார்களுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தில் இணைவோம்.

இவ்வாறான திட்டத்தையே நாங்கள் விசுவாசத்துடனும் உத்வேகத்துடனும் முன்னெடுப்போம். எமது கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமைய அரசியல் தீர்வை அடையவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமைச்சு பதவி வழங்கவுள்ளதாகவும் வடக்கில் உள்ள சிலருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு கூட்டமைப்பு தடையாக இருப்பதாகவும் கூறப்படுவதாக கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரு இலக்கை நோக்கி பயணிக்கின்றது. அந்த இலக்கை நோக்கி இன்றுவரைக்கும் தவற வில்லை. நாங்கள் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கின்றோம், எதற்காக என்றால் ஒரு அரசியல் அமைப்பு உருவாகின்ற போது அதற்கு ஆதரவாக செயற்பட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றோம்.

இந்த முயற்சிக்காக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம், அதற்காக அரசாங்கத்துடன் இருக்கின்றோம். அமைச்சு பதவியை பெறவுள்ளோம் என கூறுவது ஒரு கட்டுக்கதையாகும். இதேபோல் தான் அமைச்சரை நியமிப்பதற்கு நாங்கள் தடையாக இருக்கின்றோம் என கூறுவதும் ஒரு கட்டுக் கதை. நாங்கள் தமிழ் மக்களின் விடிவுக்காக பல்வேறு விதத்தில் போராடி வருகின்றோம். அமைச்சர் பதவி வழங்குவது நாங்கள் அல்ல, அரசாங்கம் தான் அதனை வழங்கும். இது விளங்காதவர்கள் கட்டுக்கதைகள் கதைப்பது பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இதனை தென்பகுதியிலும் சர்வதேசமும் அவதானிக்க வேண்டும். இந்த அரசியல் அமைப்பு உருவாக்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். இத்தகைய நடவடிக்கைகளை பற்றித்தான் நாங்கள் யோசிக்கின்றோமே’ தவிர அமைச்சு பதவி பெறுவது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்காக மக்கள் எங்களை தெரிவு செய்யவும் இல்லை. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட’ வேண்டும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம். அந்த இலக்குடனேயே பயணம் செய்கின்றோம்.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் கூட வடக்கு கிழக்கிற்கான விசேட திட்டம் ஒன்று எமது முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது. பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Previous Post

வெளிநாடு ஒன்றில் இலங்கைபெண் தற்கொலை

Next Post

பற்றிக் பிறவுனிற்கு எதிரான சதி விவகாரம்

Next Post

பற்றிக் பிறவுனிற்கு எதிரான சதி விவகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures