Thursday, July 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி

July 20, 2017
in News
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல பெலவத்த ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் மீளவும் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இந்த முயற்சியை அரசாங்கம் முறியடிக்க வேண்டும்.

1983ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி எமது நாட்டுக்கு கறுப்பு கறை படிந்த தினமாகும்.

உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இந்த சம்பவம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் இடம்பெற்று 34 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டின் ஆட்சியாளர்கள் பாடங்களைக் கற்றுக் கொண்டு, பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கங்கள் உரிய முனைப்பு காட்டவில்லை.

34 ஆண்டுகளுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 13 படையினர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த படையினர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனினும் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களின் சடலங்கள் அனைத்தையும் கொழும்பிற்கு கொண்டு வந்து பெரிய மரண வீடாக மாற்றியிருந்தது.

அதன் பின்னர் இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் தடிகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கே இந்த சம்பவங்கள் இடம்பெற்றன. வேண்டுமென்றே இனவாதம் விதைக்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழ் சிங்கள இனவாதம் வேகமாக வியாபித்து வளர்ந்தது.

போர் காரணமாக நாட்டுக்கு பாரியளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. நாட்டுக்கு பயனுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிவடைந்தன.

சோசலிச இளைஞர் சங்கம் ஜூலை 23ம் திகதியை சகோரத்துவ தினமாக அனுட்டிக்கின்றது. இந்த நிகழ்வில் அனைவரும் இணைந்து கொள்ள முடியும் என எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

Previous Post

தேர்தலை பிற்போட ஒரு போதும் தயார் இல்லை

Next Post

காணாமல் போனவர்கள் இரகசிய விசாரணை முகாம்களில்?

Next Post
Easy24News

காணாமல் போனவர்கள் இரகசிய விசாரணை முகாம்களில்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

மோடிக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி

July 31, 2025
அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 31, 2025
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

July 31, 2025
இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

July 30, 2025

Recent News

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

மோடிக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி

July 31, 2025
அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 31, 2025
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

July 31, 2025
இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

July 30, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures