Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது | மைக் பொம்பியோ

January 26, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது | மைக் பொம்பியோ

2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் முளூம் அபாயம் ஏற்பட்டதாகவும், அமெரிக்கா தலையிட்டு அதனை தடுத்தது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சிஐஏவின் தலைவராகவும் பணியாற்றிய மைக் பொம்பியோ, தான் எழுதிய “Never give an inch : fighting for the America I love” எனும் நூலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

2019 பெப்ரவரியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானியப் பிராந்தியத்துக்குள் இந்தியப் படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். காஷ்மீரில் தற்கொலை குண்டுத் தாக்குதலொன்றில் 41 படையினர் கொல்லப்பட்டதையடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் இந்திய விமானப் படை விமானமொன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதுடன் விமானியையும் சிறைபிடித்தது.

அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்புக்காக ட்ரம்புடன் வியட்நாமுக்கு பொம்பியோ சென்றிருந்தார்.

அப்போது தன்னை இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அவசர தொலைபேசி அழைப்பின் மூலம் உறக்கத்திலிருந்து எழுப்பினாரென பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்

‘அணுவாயுத தாக்குதலுக்கான தயார்படுத்தல்களை பாகிஸ்தான் ஆரம்பித்துவிட்டது என அவர் நம்பினார். இந்தியாவும் இது குறித்து சிந்திப்பதாக அவர் எனக்கு தெரிவித்தார்.

‘எதுவும் செய்ய வேண்டாம் எனவும் பிரச்சினையை தீர்க்க ஒரு நிமிடம் அவகாசம் தருமாறும் நான் கோரினேன்’ என பொம்பியோ எழுதியுள்ளார்.

பின்னர் அணுவாயுத தாக்குதல்களுக்கு தயாராகாமல் இருப்பதற்கு இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமெரிக்க ராஜதந்திரிகள் இணங்கச் செய்தனர் எனவும், ‘ஒரு பயங்கர விளைவைத் தடுப்பதற்கு அன்றிரவு நாம் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது’ எனவும் பொம்பியோ எழுதியுள்ளார்.

Previous Post

சீனாவுடன் நேருக்கு நேர் மோதி இந்திய வீரர்கள் அதீத துணிச்சலை வெளிப்படுத்தினர் | ராஜ்நாத் சிங்

Next Post

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு | கமல்ஹாசன்

Next Post
இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு | கமல்ஹாசன்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு | கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures