Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவுடன் வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார்

June 13, 2019
in News, Politics, World
0

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்து இருக்கிறார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். இருப்பினும் அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீது 100 சதவீத வரியை விதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏராளமாக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து இங்கே அனுப்புகிறார்கள். அவற்றின் மீது அமெரிக்கா வரி போடுவதில்லை.

எனவே, நான் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இதுபற்றி பேசினேன். இதை ஏற்க முடியாது என்று சொன்னேன். அந்த தொலைபேசி அழைப்பால் 50 சதவீத வரியை குறைப்பதாக மோடி கூறினார்.

ஆனால் இதையும் ஏற்க முடியாது. ஏனென்றால், அமெரிக்கா அவர்களுக்கு வரியே விதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டேன். இதனை இந்தியா இன்னும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. னைவரும் கொள்ளையடிக்க விரும்புகின்ற வங்கியைப்போல அமெரிக்கா இருக்கிறது. இதைதான் அனைவரும் நீண்ட காலமாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளால் நமக்கு 800 பில்லியன் டாலர் (சுமார் ரூ.56 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதனையடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு வருகிற 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை பற்றி கூறுகையில், ‘இந்தியாவுடனான வெளிப்படையான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தொடர்ந்து தயாராக இருக்கிறோம். இந்தியாவில் உள்ள எங்களுடைய நண்பர்கள் வர்த்தக தடைகளை கைவிடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். வர்த்தக போட்டியில் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். இந்தியாவிற்கு நான் வருகை தரும்போது, ஜி.எஸ்.பி. முடிவு பற்றி ஆலோசிக்கப்படலாம். எங்களுடைய பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்’ என்று கூறினார்.

Previous Post

அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அணுமதி

Next Post

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

Next Post

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures