புலனாய்வு தகவல்களைப் பெற்றுகொள்வதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
மாதுருஒயா இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், “நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் ஏதாவதொரு சம்பவம் இடம்பெறக்கூடும். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதிப்படுத்தவோ உத்தரவாதமளிக்கவோ முடியாது.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய வலையமைப்பை இனங்கண்டுள்ளோம். விஷேடமாக இந்தியாவுடன் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இணைந்து செயற்படுகின்றோம்.
தற்போது சர்வதேச பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கிடையே உறவுகள் பேணப்பட வேண்டியது அவசியமாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.