இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, புல்வாமா தாக்குதல் மிகவும் துயரமான சம்பவம் எனக் குறிப்பிட்ட அவர், நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு அறிவார்ந்தமாக சிந்திக்க வேண்டிய நேரம் இதுவெனக் கூறினார்.
அத்துடன், புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

