Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இத்தாலியில் ஏற்ப்பட்ட பெரும் புயல் முப்பதுபேர் பலி

November 5, 2018
in News, Politics, World
0
இத்தாலியில் ஏற்ப்பட்ட பெரும் புயல் முப்பதுபேர் பலி

இத்தாலியை கடந்த ஒரு வாரமாக புரட்டி போட்ட புயல் நேற்று கரையை கடந்தது.

புயலின் போது பெய்த பலத்த மழையால், வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் சிசிலி, தெற்கு சர்டினியா ஆகிய பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மிலிசியா எனும் ஆற்றின் கரை உடைந்த வெள்ளத்தால், பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் 12 பேர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்தும், வீடுகள் இடிந்தும் விழுந்ததால் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 30 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூட நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் Matteo Salvini சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் காடுகள் இந்த புயலின் தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், பாதிப்புகளை சரிசெய்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த 40 பில்லியன் யூரோக்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இனத்தை அழித்த பணத்தை நான் தொடமாட்டேன்

Next Post

பிரபாகரனின் பயணத்தை அடைவதற்காக கூட்டமைப்பு முயற்சி செய்கிறது : சிறிதரன் எம் .பி

Next Post

பிரபாகரனின் பயணத்தை அடைவதற்காக கூட்டமைப்பு முயற்சி செய்கிறது : சிறிதரன் எம் .பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures