Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

February 8, 2022
in News, Sri Lanka News
0
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பல்வேறு காரணங்களுக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளை உரிய ஒழுக்காற்று விசாரணை அல்லது சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளாது இருக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான அதிகாரிகளை மேலும் பாதுகாப்பது திணைக்களத்தின் நல்வாழ்வுக்கு பாதகமாக அமையும் என்பதனால் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சேவையை நிறுத்த அல்லது கடுமையான தண்டனைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் நடவடிக்கைகள் மற்றும் சித்திரவதை அல்லது கைதிகளை தாக்கியதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனைத்து அத்தியட்சகர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0112678600 என்ற இலக்கத்தின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் பெயர் வெளியிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான 8 பேருக்கு பிணை

Next Post

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருட்டு

Next Post
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures