Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இடைக்கால கணக்கறிக்கை குறித்த விவாதம் இன்று ஆரம்பம்!

August 27, 2020
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறும்.

அதன் பின்னர் நாளை மறுதினம் 28ஆம் திகதியன்று இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டோ அல்லது வாக்கெடுப்பு இன்றியோ நிறைவேற்றிக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட உள்ளமையினால் மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை உருவாக்க அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இதற்கான நடவடிக்கை கடந்த ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதேவேளை, மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையின் முழு செலவினம் ஆயிரத்து 747.68 பில்லியன் ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசசேவைகள் மற்றும், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கு 194.38 பில்லியன் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்து பாதுகாப்பு அமைச்சுக்கு 174.09 பில்லியனும் உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள அரசமுறை கடன்களை செலுத்த 778.39 பில்லியனும் இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒதுக்கியுள்ள நிதியை திரட்டிக்கொள்ள 1300 பில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

13,19ஆவது திருத்தங்கள் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் ; இரா .சம்பந்தன்

Next Post

தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்ய சூழ்ச்சி – ஹர்ஷ டி சில்வா

Next Post

தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்ய சூழ்ச்சி – ஹர்ஷ டி சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures