Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இங்கிலாந்தில் புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு?

January 22, 2022
in News, Sri Lanka News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

ஒமிக்ரோனின் புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, டெல்டா, பீட்டா, காமா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.

இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒமிக்ரோன் வைரசில் இருந்து உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒமிக்ரோன் வைரசின் துணை திரிபான பிஏ-2 வைரஸ் கண்டறியப்பட்டது

. அந்த வைரஸ் சமீபத்தில் பரவத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

. இந்த புதிய மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பிஏ-2 வைரஸ் டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமிக்ரோனின் புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு தகவலின்படி ஒமைக்ரான் மாறுபாடு மூன்று துணை திரிபுகளை கொண்டுள்ளது.

பிஏ-1, பிஏ-2 மற்றும் பிஏ-3 என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒமிக்ரோன் பாதிப்பு 99 சதவீதம் பிஏ-1 வைரஸ் பாதிப்பை கொண்டிருந்த நிலையில் தற்போது பிஏ-2 மாறுபாடும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோனின் புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

“என்னை சிறைப்படுத்த முடியாது” | முன்னாள் ஜனாதிபதி உறுதி!

Next Post

ஜனாதிபதி கோட்டாபயவால் எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்? | தெற்கு ஊடகம் தகவல்

Next Post
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு

ஜனாதிபதி கோட்டாபயவால் எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்? | தெற்கு ஊடகம் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures