Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது மொரோக்கோ சிறுவன் நான்கு நாட்களின் பின் சடலமாக மீட்பு!

February 6, 2022
in News, World
0
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது மொரோக்கோ சிறுவன் நான்கு நாட்களின் பின் சடலமாக மீட்பு!

வடக்கு ஆபிரக்க நாடான மொராக்கோவில் நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியின்போது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Image

சிறுவன் சனிக்கிழமையன்று கிணற்றிலிருந்து மீட்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக அரச அரண்மை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

மொராக்கோவின்  வடக்கு பகுதியில்  இகரா என்ற கிராமம் அருகே 32 மீற்றர் (104 அடி) ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான்.

Image

உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.

சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் அவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் மீட்கப்பட்டான் என்ற செய்திக்காக காத்திருந்தனர்.

Bystanders watch as Moroccan emergency teams work to rescue five-year-old boy

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற சிறுவன் உடல் மீட்கப்பட்டதாகவும் சனிக்கிழமை மாலை மொராக்கோ அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது சிறுவனின் பெற்றோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு அவசியம் | இந்தியாவுக்கு இன்று புறப்படுகிறார் பீரிஸ்

Next Post

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு கொள்கலன்கள்

Next Post
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு  கொள்கலன்கள்

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு கொள்கலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures