Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆரம்பிக்க சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி – இது தான் காரணம்

September 18, 2021
in News, Sports
0
ஆரம்பிக்க சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி – இது தான் காரணம்

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரமே இருந்தவேளையில் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை நிறுத்துவதற்கு நியூஸிலாந்து தீர்மானித்தது. பாதுகாப்பு விடயத்தை காரணம் காட்டி இந்த தீர்மானத்தை எடுத்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் ச‍பை தெரிவிக்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானிலிருந்து திடீரென வெளியேற எடுத்த முடிவு முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று (17) ராவல்பிண்டியில் ஆரம்பமாகவிருந்தது.

 

இந்நிலையில், இப்போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருந்தவேளையில்,  பாகிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தயாரானது.

இதற்கான காரணத்தை நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவிக்காதபோதும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை இரத்து செய்து பாகிஸ்தானிலிருந்து வெளியேற தீர்மானித்தது.

“இப்போட்டித் தொடரிலிருந்து நாம் வெளியேறுவது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு  பெரும் ஏமாற்றமாகும். எனினும், வீரர்களின் பாதுகாப்ப‍ே எமக்கு  பிரதானமாகும்” என நியூஸிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்ற அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி  18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

Next Post

காபூலில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் 10 பொது மக்கள் பலி; ஒப்புக் கொண்டது பென்டகன்

Next Post
காபூலில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் 10 பொது மக்கள் பலி; ஒப்புக் கொண்டது பென்டகன்

காபூலில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் 10 பொது மக்கள் பலி; ஒப்புக் கொண்டது பென்டகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures