ஆப்பிள் போனை பயன்படுத்தியதால் தன் இரு ஊழியர்களை சீன நிறுவனமான ஹூவே போன் நிறுவனம் அவர்களின் பதவியை பறித்துள்ளது.
ஹூவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து
புத்தாண்டு வாழ்த்துகளை அந்நிறுவன ஊழியர்கள் ட்விட் செய்துள்ளனர்.
ஐ போனில் இருந்து வெளியிடப்பட்டதை காட்டிக்கொடுக்கும் விதமாக அந்த வாழ்த்துச்
செய்தியுடன் ‘ஐ போனில் இருந்து இந்த ட்விட் வெளியிடப்பட்டது’ என்று ஒரு தகவல் வந்துள்ளது.
இதனால் இவ்விரு ஊழியர்களும் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஹூவே பதவி குறைப்பு செய்ததோடு, அவர்களின் ஊதியத்தையும் குறைத்துள்ளது.
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் போனில் ‘சாம்சங்’ நிறுவனத்துக்கு அடுத்து இரண்டாமிடத்தில் ஹூவே நிறுவனம் உள்ளது.
கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் உட்பட பல வெளிநாட்டு வலைதளங்களை தன் எல்லைக்குள் பயன்படுத்த இயலாதவாறு சீனா தடுத்துள்ள போதிலும், பல்வேறு தனியார் வலையமைப்புகள் மூலம் இவற்றை எண்ணற்ற மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சீன அரசின் செய்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு சீன நிறுவனங்கள் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்துகின்றனர்.
சீன அரசின் இந்த இரட்டைநிலை குறித்து அந்நாட்டின் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளனர்.