Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

“ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்”: சந்திரபாபு திட்டவட்டம்

June 11, 2024
in News, Sri Lanka News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
“ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்”: சந்திரபாபு திட்டவட்டம்

அமராவதி: “அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம்” என அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஹைதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.

பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என உத்தரவிட்டார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அந்த உத்தரவை அவர் திரும்பப்பெற்றுக் கொண்டார். தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வருகிறது.

தலைநகர் என்ன?

இந்நிலையில், நாளை(ஜூன் 12) ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு, அம்மாநில தலைநகர் குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அமராவதி தான் எங்களின் தலைநகர்.
ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை. அதேநேரம், விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகராக இருக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Previous Post

“பிரதமர் மோடிக்கு நன்றி”: பதவி ஏற்ற பின் எல்.முருகன் பேட்டி

Next Post

இந்திய இளைஞர் சுட்டுக்கொலை கனடாவில் மர்ம நபர்கள் வெறி

Next Post
இந்திய இளைஞர் சுட்டுக்கொலை கனடாவில் மர்ம நபர்கள் வெறி

இந்திய இளைஞர் சுட்டுக்கொலை கனடாவில் மர்ம நபர்கள் வெறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures