Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆடிக்கிருத்திகை – இன்று ஆறுமுகனை விரதம் இருந்து வழிபட சிறந்த நாள்

August 2, 2021
in News, ஆன்மீகம்
0
ஆடிக்கிருத்திகை – இன்று ஆறுமுகனை விரதம் இருந்து வழிபட சிறந்த நாள்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர்.

இன்று கிருத்திகை நட்சத்திரம். பொதுவாக, கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பார்கள். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது.

கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் முருகன் மிகவும் மகிழ்வான். குறிப்பாக, ஆறுமுகனாக இன்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

மேலும் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். பொதுவாகவே, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.

வழக்கமாக இந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை அத்தகைய கொண்டாட்டங்கள் இன்றி அவரவர் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடாக மாறியிருக்கிறது. இந்த நாளில் விரதம் இருந்து வீட்டில் முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.

எனவே, இந்த நாள் முழுவதும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தை ஓதுவோம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் வகுப்பு, வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்வோம். இந்த நாளில் முருகப்பெருமானுக்கு அவல் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். இதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் குறைந்து அமைதியும் அன்பும் பெருகும் என்பது ஐதிகம்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: காவடி ஆட்டம் ஆடி உற்சாகம்

Next Post

மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயம்

Next Post
மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயம்

மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures