Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசிரியர் இடமாற்றம் குறித்து ஜனாதிபதி எடுத்த முடிவு

March 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை உடனடியாக அமுலாகும் வகையில் கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய ஆசிரியர் இடமாற்று சபையின் பரிந்துரைக்கமைய நடைமுறைப்படுத்தப்படவிருந்து 12,500 ஆசிரியர்களின் அனைத்து இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது ஆசிரியர் இடமாற்றமும் வழங்கப்பட்டால் அது மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் , அதனைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதியால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் , செலவுகள் அதிகரித்துள்ளமை , வரி மற்றும் வாடகை வீட்டு பிரச்சினைகள் உள்ளிட்ட மனிதாபிமானக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள ஆசிரியர்களும் இடமாற்றத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடமாற்றங்கள் அரசியல் ரீதியில் நோக்கப்படும் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சகல காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி ஆசிரியர் இடமாற்ற சபையை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட இந்த பணிப்புரை தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவரிடம் வினவிய போதே இவ்விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டன.

Previous Post

மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை – நாமல்

Next Post

வடக்கின் சமர் ஒருநாள் போட்டி : யாழ். மத்திய கல்லூரி அணியை 21 ஓட்டங்களால் வென்றது சென். ஜோன்ஸ்

Next Post
வடக்கின் சமர் ஒருநாள் போட்டி : யாழ். மத்திய கல்லூரி அணியை 21 ஓட்டங்களால் வென்றது சென். ஜோன்ஸ்

வடக்கின் சமர் ஒருநாள் போட்டி : யாழ். மத்திய கல்லூரி அணியை 21 ஓட்டங்களால் வென்றது சென். ஜோன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures