ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.
இந்த போராட்டத்தை அடுத்து ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.
இந் நிலையில் அமைச்சரவையின் உபகுழுவிற்கும் அதிபர், அசிரிய தொழிற்சங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதனை கருத்திற்கொண்டே எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை தற்காலிகமான கைவிட்டுள்ளோம்.
வாக்குறுதிகளுக்கு அமைய எமது சம்பள முரண்பாட்டுக்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு வாரகால அவகாசத்தையும் வழங்கியுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

