பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க தயார்.
அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலக போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சி தலைவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் , முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]