Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோவில்

September 14, 2021
in News, ஆன்மீகம்
0
அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோவில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

மூலவர் – மலை அடிவாரக் கோயில் : பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்.

மலைக்கோயில்: அஹோபில நரசிம்மர்
தாயார் – அடிவாரக் கோயில் : அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி.

மலைக்கோயில்: லட்சுமி .

தீர்த்தம்– மலை அடிவாரக் கோயில் : இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்கவ தீர்த்தம்.

மலைக்கோயில்: பாபநாசினி.

ஊர்– அஹோபிலம்

மாநிலம் – ஆந்திர பிரதேசம்

தல வரலாறு :

இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி உடையவன். ஆனால் இரணியகசிபு தானே கடவுள் என்று கூறி அகந்தையில் இருந்தான். பிரகலாதன் நாராயணன் புகழ் பாடினான். எங்கே ஒரு முறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார் என்றான் பிரஹலாதன்.

கோபம் கொண்ட இரணியன் தன் கதாயுதத்தால் ஒரு துணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரத்தின் நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்தது. பிரகலாதன் வாழ்ந்த அரண்மனை பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.

நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டினார். பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றை கிழித்தது ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் ஒன்பது திருக்கோலங்கள் இங்கு உள்ளன.

கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாச்சலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயர் வந்தது. சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபில மாகும். மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. இதனை நவ நரசிம்ம ஷேத்திரம் என்பர் இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவார கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை ஜயஸ்தம்பம் அதாவது வெற்றித் தூண் என்கிறார்கள். இந்தத் துணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்தத் தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

மலையடிவார கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம் மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட உக்கிர ஸ்தம்பம் தூண் உள்ளது. மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும் மலைமேல் ஒரு கோயிலும் உள்ளது.

அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. கரடு முரடான பாதைகள் செங்குத்தான மலை மீது ஏற வேண்டும் மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

Next Post

பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா – கார்த்தி

Next Post
பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா – கார்த்தி

பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா - கார்த்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025

Recent News

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures