Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அறிக்கையை ஏற்க மைத்திரி மறுப்பு

October 30, 2019
in News, Politics, World
0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற தெரிவக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின்போது, ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த தெரிவுக்குழுவின் அறிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த அறிக்கையை தான் ஏற்க மாட்டேன் என்று கூறிய ஜனாதிபதி, அதை அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலாக பாதுகாப்பு குறைபாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆராயுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த தெரிவுக்குழு, தனது அறிக்கையை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

குறித்த அறிக்கையில், 250இற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, அரச புலனாய்வு சேவை மற்றும் அரசாங்கத் தலைவர்களை குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி தேர்தல் – தமிழ் கட்சிகளின் முக்கிய தீர்மானம் இன்று!

Next Post

மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத்

Next Post

மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures